சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.030
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பண் - கொல்லி (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4-ivX5pJI7A |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.030  
பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,
பண் - கொல்லி (திருத்தலம் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) ; (திருத்தலம் அருள்தரு அலங்காரநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரதேசுவரர் திருவடிகள் போற்றி )
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி, மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை, நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [1] |
கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும் பயலை கொள்ள, பலி தேர்ந்து உழல் பான்மையார் இயலை, வானோர் நினைந்தோர்களுக்கு, எண்ண(அ)ரும் பெயரர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [2] |
கோடல் சால(வ்) உடையார், கொலை யானையின் மூடல் சால(வ்) உடையார், முளி கான் இடை ஆடல் சால(வ்) உடையார், அழகு ஆகிய பீடர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [3] |
மண்ணர், நீரார், அழலார், மலி காலினார் விண்ணர், வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள பண்ணர், பாடல் உடையார், ஒருபாகமும் பெண்ணர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [4] |
மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு, கறைகொள் சூலம்(ம்), உடைக் கையர்; கார் ஆர்தரும் நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல் பிறையர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [5] |
புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம், தற்று, இரவில் நடம் ஆடுவர்; தாழ்தரு சுற்று அமர் பாரிடம், தொல்கொடியின்மிசைப் பெற்றர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [6] |
துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர் வெண்பொடி இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும்(ம்), எரி- கணையினால் முப்புரம் செற்றவர், கையினில் பிணையர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [7] |
சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல் அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும் பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [8] |
வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும் எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர், கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [9] |
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்தொறும் ஏண் இலாத(ம்) மொழிய(வ்), எழில் ஆயவர்; சேண் உலாம் மும்மதில் தீ எழச் செற்றவர் பேணு கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [10] |
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என, பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை, சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |